அது ஒரு குளிர்கால இரவு. ஏழு மணி தான் ஆயிருக்கும் ஆனால் அன்றைய இரவுக்கு கொஞ்சம் கருமை அதிகமாகவே இருந்தது போலத் தெரிந்தது. கையில் லேப்டாப் பையுடன் வேகமாக அந்தப் பார்க்கிங் லாட்டில் அவசரமாக நடந்து கொண்டிருந்தேன். பத்துக்கும் குறைவான கார்களே அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆள் நடமாட்டமும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. மனதிலும் நடையிலும் வாடகைக்காரை திருப்பிக் கொடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்ப விமானத்திற்கு சரியான நேரத்துக்குப் போகனும்கிற அவசரம். அந்த இருளின் பயமும் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. என் காரைத் தூரமாக இருந்தே ரிமோட்டால் திறந்து வைத்துக்கொண்டேன். அந்த சாம்பல் நிறக்காரை அடைந்தவுடன் பின் கதவைத் திறந்து வேகமாக லேப்டாப் பையைத் திணித்து கதவை ஓங்கி மூடினேன். அதே வேகத்துடன் ஓட்டுநர் இருக்கையையும் திறந்து உள்ளே நுழைந்தேன். இது மாதிரி இருளான இடங்களில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கும் மக்களோ, கஞ்சா அல்லது ஏதோ ஒரு போதைக்காக இரந்து நிற்கும் மனிதனோ, பயமுறுத்தும் எண்ணத்துடன் விகார முகத்தைக் கொண்ட ஆணோ பெண்ணோ, இருப்பார்கள் என்று எனது ரொம்ப நாளைய பயம். காருக்குள் நுழைந்த