முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்துப் பேசி முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய அனுபவம் நெகிழ்ச்சியானதே. இருவருமே புளகாங்கிதம் அடைந்த ஒரு வித்தியாசமான தருணம். "அம்மா வருவாயா? " என்ற புத்தகத்தை அட்லாண்டா வாழ் தமிழர் ராஜி ராமச்சந்திரன் எழுதி பாண்டிச்சேரி "ஒரு துளிக்கவிதை" என்ற இயக்கம் அட்லாண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிட்ட நிகழ்ச்சியில் தான் அது நடந்தது. புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய லட்சுமி சங்கர் அவர்கள் நுலில் உள்ள வியாசங்களைப் பற்றி ஆற்றிய பேரூரை இந்தப் புத்தகத்தை வாங்கத் தூண்டியது. அன்றே படிக்க ஆரம்பித்து அமெரிக்க் குடும்ப வாழ்க்கையில் துளித்துளியாக கிடைக்கும் நேரங்களில் படித்து மூன்று நாட்களில் படித்து முடிக்க முடிந்தது. மிக எளிய நடை. படிப்போரை வேகமாக உள்ளிழுக்கும் ஒரு எளிமை எழுத்தில் இருக்கிறது. அனுபவக் கட்டுரைகள் என்ற தலைப்பில் அனைத்துக் கட்டுரைகளையும் சேர்க்க முடியும் என்றாலும் அவை மிகவும் வேறுபட்ட பல அனுபவங்களை வைத்து