அனந்தியின் டயறி என்பது ஜெர்மனியின் பெர்லின் நகரில் வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தி அவர்கள் எழுதிய ஒரு நூல். இளங்கல்லூரிப் பெண் ஒருத்தியின் பார்வையில் புலம்பெயர் வாழ்க்கையின் அனுபவங்கள் குறித்து ஒரு வருடத்தின் டயறிக் குறிப்புகளாக எழுதியுள்ளார். முதலில் நூலின் வடிவத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும்.நம் குழந்தைகள் வாசிக்கும் Diary of wimpy kids புத்தகமும் மேலும் பல புத்தகங்களும் எழுத்தாளருக்கு இந்த டயறி வடிவத்தை நோக்கிய ஈர்ப்பை அளித்ததாக முன்னுரையில் கூறியுள்ளார். இந்த வடிவம் எழுத்தாளருக்கு ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. கதை, கவிதை, நகைச்சுவை, முகநூல் குறிப்பு, நூல் அறிமுகம், ஆங்கில மற்றும் ஜெர்மன் வார்த்தைகள் கற்பித்தல் , திரைப்பட அறிமுகம், டிவி தொடர் விமர்சனம், நடன வகுப்பு, பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள் என இவற்றின் வழியாக ஒரு புலம்பெயர் வாழ்க்கையை சித்தரிக்க இந்த வடிவம் பெரிதும் உதவியிருக்கிறது. இந்த வடிவம் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. சாருவின் ஜீரோ டிகிரி மற்றும் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் இவைகளும் குறிப்புகளாகவே விர