நண்பன் ஒருவன் புது மனைப் புகு விழாவிற்கு அழைத்திருந்தான். 2000 சதுர அடியில் கூடுவாஞ்சேரி பக்கம் ஒரு பெரிய தனி வீடு கட்டியிருக்கான். ரெண்டு பஸ் மாறி பஸ் ஸ்டாப் ல இறங்கி ஒரு பர்லாங் நடந்து போய் சேர்ந்தேன். நிறய பேரை கூப்பிடலைன்னு அங்கே போன பின்புதான் தெரிய வந்தது. காதைக் கிழிக்கும் சத்தத்தில் இல்லாமல் " பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோலமயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே" என்று டி. எம். எஸ் மிதமான சத்தத்தில் பாடிக் கொண்டிருந்தார் . தோரணத்திற்கு கட்டி இருந்த வாழை மரத்துக்கு பக்கத்துல செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போனேன். நண்பனும் அவனோட மனைவியும் "வாங்க" ன்னு இரு கரம் குவித்து வரவேற்றனர் . "தச்சு கழிச்சாச்சா" ன்னு விசாரிச்சேன் . " 4 மணிக்கே முடிஞ்சுது " ன்னு சொன்னாங்க. ஊரில் இருந்து வந்த உறவினர்களை அவர்கள் கட்டிய வேட்டி அடையாளம் காண்பித்துக் கொண்டிருந்தது . அவர்கள் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக ஏதோ ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்த பரபரப்பைக் காண முடிந்தது . பார்த்த எல்லாருடைய கைகளில் சந்தானம் தாரளமாக அள்ளி